Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சட்டசபையில் மாநில சுயாட்சி தீர்மானம்.. அதிமுக, பாஜக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு..!

Mahendran
செவ்வாய், 15 ஏப்ரல் 2025 (12:59 IST)
மாநில அரசின் உரிமைகளை காக்கும் உயர்நிலைக் குழு அமைக்கும் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
 
இன்று சட்டப்பேரவையில், ஆளுநருக்கு எதிரான உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு, மாநில சுயாட்சி தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி, ஓய்வுபெற்ற நீதிபதி ஜோசப் குரியன் தலைமையில் உயர்நிலைக் குழு அமைக்கப்படுவதாகவும், அதன் இடைக்கால அறிக்கை 2026-ல் தாக்கல் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதில், மாநில உரிமைகளை மீட்டெடுக்கும் பரிந்துரைகளை இந்த குழு வழங்கும் என்று கூறப்பட்டது.
 
இந்த நிலைஇயில்  நயினார் நாகேந்திரன் மற்றும் பாஜக எம்எல்ஏக்கள், இந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். அவர், “மாநில சுயாட்சியின் மூலம் நாட்டின் வலு குறையும்” என்று குறிப்பிட்டார்.
 
முன்னதாக அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு  பேச வாய்ப்பு அளிக்கவில்லை என்ற காரணத்திற்காக அவர்களும் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் ஸ்டாலின் கண்டுபிடித்த புதிய மடைமாற்று வித்தை: நயினார் நாகேந்திரன்

நாட்டின் புதிய ஜின்னா தான் மம்தா பானர்ஜி.. பாஜக கடும் விமர்சனம்..!

தமிழகத்தில் ஏப்ரல் 21 வரை மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

முதல் ஸ்கெட்ச்சு பொன்முடிக்கு.. ஆளுநரை சந்திக்கும் நயினார் நாகேந்திரன்!

ஆங்கில புத்தகங்களிலும் ஹிந்தி.. கடிதத்தில் ஹிந்தி.. என்னது இது? - சு.வெங்கடேசன் ஆதங்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments