Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இராணுவ வீரர்களின் தியாகத்தினை அரசியல் லாபத்திற்காக பா.ஜ.க பயன்படுத்தி வருகின்றது – சஞ்சய் தத்

இராணுவ வீரர்களின் தியாகத்தினை அரசியல் லாபத்திற்காக பா.ஜ.க பயன்படுத்தி வருகின்றது –  சஞ்சய் தத்
, வெள்ளி, 1 மார்ச் 2019 (18:35 IST)
கரூர் பாராளுமன்றத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் ஆயத்த கூட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் கமிட்டி அகில இந்திய செயலாளர் சஞ்சய் தத் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். 

அப்போது., இராணுவ வீரர்கள் தியாகத்தை அரசிலுக்கு லாபத்திற்காக பாஜக பயன்படுத்தி கொள்கிறது. கர்நாடகாவில் இந்த போரால் 24 இடங்கள் கிடைக்கும் என்று எடியூரப்பா கூறியதை மோடி கண்டிக்கவில்லை காஷ்மீரில் அண்மையில் தீவிரமாக தாக்குதலை பாஜக தேர்தலுக்காக பயன்படுத்தி கொண்டு உள்ளது. நரேந்திர மோடி ஆட்சியில் பணக்காரர்களுக்கு மட்டுமே கடந்த 5 ஆண்டுகளாக செயல்பட்டது என்றும். ஊழலை மறைக்கவே அதிமுக,பாஜக,பாமக ஒன்று சேர்ந்து உள்ளன. பிரதமர் நரேந்திர மோடி இபிஎஸ் ஓபிஎஸ் ஆட்சியை டெல்லியிலிருந்து ரிமோட் மூலம் இயக்கிக் கொண்டிருக்கிறார். பாஜக ஆட்சி கடந்த 5 ஆண்டுகளாக தமிழர்களுக்கு எதிராக செயல்பட்டார் என தெரிவித்தார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அபிநந்தன் இந்தியா வந்தாச்சு!! அடுத்து என்ன நடக்கும்?