Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாஜக பிரமுகர் காருக்கு தீ வைப்பு ­- விசிக நடத்தியதா?

பாஜக பிரமுகர் காருக்கு தீ வைப்பு ­- விசிக நடத்தியதா?
, வெள்ளி, 15 ஏப்ரல் 2022 (14:06 IST)
மதுரவாயலில் பாஜக பிரமுகர் காருக்கு அடையாளம் தெரியாத நபர்கள் தீ வைத்தனர்.

 
சென்னை மதுரவாயல் கிருஷ்ணா நகர் 1வது தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார். திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜக செயலாளராக உள்ளார். இவரது வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இவருடைய கார் தீப்பிடித்து எரிந்தது.
 
இதுகுறித்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது அதில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர், துணியை பெட்ரோலில் நனைத்து காரின் நான்கு பக்கங்களிலும் துடைத்து உள்ளார். அதன் பிறகு காரை தீ வைத்து கொளுத்துவதும் சிசிடிவி கேமராவில் தெளிவாக பதிவாகியுள்ளது.
 
சம்பவ இடத்திற்கு வந்த மதுரவாயல் போலீசார் வழக்குப் பதிவு கட்சி ரீதியாக ஏதேனும் முன்விரோதம் காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்தில் சிசிடிவி காட்சியை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
மேலும், நேற்று காலை அம்பேத்கரின் பிறந்தநாள் விழாவின் போது கோயம்பேட்டில் சிலைக்கு மாலை அணிவித்தபோது விசிக - பாஜகவினரிடையே மோதல் ஏற்பட்டு பாஜக பிரமுகருக்கு மண்டையில் காயமும் ஏற்பட்டது. இந்நிகழ்வில் சதீஷ்குமாரும் பங்கேற்றிருந்தார். அதன் தொடர்ச்சியாக ஏதும் நடந்ததா எனவும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

என்ஐடி கல்லூரி விடுதியில் மாணவி தூக்கிட்டு தற்கொலை!