Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜக கூட்டணி வேணும்! அன்புமணியும், சௌமியாவும் கதறி அழுதார்கள்! - ராமதாஸ் சொன்ன சம்பவம்!

Prasanth Karthick
வியாழன், 29 மே 2025 (13:36 IST)

பாமகவில் அன்புமணி - ராமதாஸ் இடையே முரண்பாடுகள் எழுந்துள்ள நிலையில் அன்புமணி குறித்து ராமதாஸ் பேசியுள்ள தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது.

 

பாண்டிச்சேரியில் நடைபெற்ற பாமக பொதுக்கூட்டத்தில் மேடையில் வைத்து அன்புமணியை ராமதாஸ் மறைமுகமாக கண்டித்ததும், அன்புமணி பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து கட்சி பிரமுகர்கள் இருவரிடையே பேசி சமாதானம் செய்து வைத்ததாக கூறப்பட்டது.

 

இந்நிலையில் சமீபத்தில் மகாபலிபுரத்தில் நடந்த பாமக மாநாட்டிலும் இருவரிடையே முட்டிக் கொண்டுள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து அன்புமணி, நான் என்ன தவறு செய்தேன் என கேட்டு பேசியிருந்த நிலையில், அன்புமணியை வெளிப்படையாக குற்றம் சாட்டி பேசியுள்ளார் ராமதாஸ்.

 

தைலாபுரத்தில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர் கடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்தது குறித்து பேசியுள்ளார். அதில் அவர் “பாஜகவுடன் கூட்டணி வைக்காவிட்டால் நீங்கள்தான் எனக்கு கொள்ளி வைக்க வேண்டும் என அன்புமணி என்னை மிரட்டினார். அவரும், சௌமியாவும் என் காலைப் பிடித்து அழுதனர், என்னால் ஒன்றும் சொல்லமுடியவில்லை.

 

கூட்டணிக்கான எல்லா ஏற்பாட்டையும் சௌமியாவே செய்தார். மறுநாள் காலை என் வீட்டு வாசலில் பாரத் மாதா கி ஜே என்ற கோஷம் கேட்கிறது. இது எல்லாம் எனக்கு தெரியாமலே நடந்தது” எனக் கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜக கூட்டணி வேணும்! அன்புமணியும், சௌமியாவும் கதறி அழுதார்கள்! - ராமதாஸ் சொன்ன சம்பவம்!

அரசியலில் நம்பிக்கை முக்கியம்.. சொன்ன வார்த்தையை காப்பாற்ற வேண்டும்: பிரேமலதா

மாணவர்களுக்கு தங்க காசு, வைர மோதிரம்.. கோலாகலமாக நாளை விஜய் விழா..!

திமுக எதிர்க்கட்சியாக கூட வராது: பிரபல அரசியல் விமர்சகர் கணிப்பு..!

விஜய் செல்லும் இடத்திற்கு முன்கூட்டியே செல்லும் திமுக.. அவ்வளவு பயமா?

அடுத்த கட்டுரையில்
Show comments