Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

5,000 பேருக்கு பிரியாணி விருந்து: செந்தில் பாலாஜி விடுதலையை கொண்டாடிய தொழிலதிபர்!

5,000 பேருக்கு பிரியாணி விருந்து: செந்தில் பாலாஜி விடுதலையை கொண்டாடிய தொழிலதிபர்!

Mahendran

, வெள்ளி, 27 செப்டம்பர் 2024 (16:42 IST)
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று விடுதலையான நிலையில் அதனை திமுக தொண்டர்கள் கொண்டாடி வரும் நிலையில் கரூரை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் 5000 பேருக்கு பிரியாணி விருந்து வைத்து கொண்டாடியதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த தோகை முருகன் என்ற தொழில் அதிபர் திமுகவின் அனுதாபி என்றும் குறிப்பாக செந்தில் பாலாஜி என் தீவிர ஆதரவாளர் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று ஜாமீனில் செந்தில் பாலாஜி விடுதலை ஆன நிலையில் இவர் பிரியாணி விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளார். இன்று காலை முதல் பிரியாணி பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது என்றும் சுமார் 5000 பேர் வரை இதுவரை பிரியாணி சாப்பிட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

750 கிலோ அரிசி, 1500 கிலோ கோழிக்கறி, 5000 முட்டைகள் என பிரியாணி தயாரிக்கப்பட்டதாகவும் பத்தாயிரம் தண்ணீர் பாட்டில்கள் வரவழைக்கப்பட்டு விருந்து தடபுடலாக நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது,

ஏற்கனவே கொரோனா வைரஸ் தொற்று காலத்தில் தோகை முருகன் தூய்மை பணியாளர்களுக்கு மளிகை பொருட்கள் காய்கறிகள் உள்ளிட்டவற்றை வழங்கி உதவி செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறேன் - சர்ச்சை பேச்சாளர் மகாவிஷ்ணு.!!