Publish Date: Sat, 22 May 2021 (08:38 IST)
Updated Date: Sat, 22 May 2021 (09:03 IST)
தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரிய கருப்பன் கடனை மக்களிடம் இருந்து வசூலிப்பதில் மெண்மையான போக்கைக் கடைபிடிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
கொரோனா இரண்டாவது அலை காரணமாக லாக்டவுன் அறிவிகக்ப்பட்டுள்ள நிலையில் மக்களின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மக்களிடம் இருந்து கடனை வசூலிப்பதில் மென்மையான போக்கைக் கடைபிடிக்க வேண்டும் என ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.