Publish Date: Mon, 08 Mar 2021 (07:53 IST)
Updated Date: Mon, 08 Mar 2021 (08:18 IST)
வங்கிகளை தனியார்மயமாக்குவதைக் கண்டித்து மார்ச் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் அறிவித்துள்ளனர்.
வங்கிகளை தனியார்மயமாக்குவதைக் கண்டித்து அகில இந்திய தேசியமயமாக்கப்பட்ட வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இந்த வேலை நிறுத்தம் மார்ச் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு முந்தைய நாட்களான 13 மற்றும் 14 ஆகிய தேதிகள் சனி மற்றும் ஞாயிறு விடுமுறை என்பதால் தொடர்ந்து நான்கு நாட்கள் வங்கிகள் இயங்காத சூழல் உருவாகியுள்ளது.