Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சொத்துகுவிப்பு வழக்கில் தினகரனின் சகோதரிக்கு பிடிவாரண்ட்: நீதிமன்றம் அதிரடி!

Webdunia
வெள்ளி, 19 ஜனவரி 2018 (16:53 IST)
டிடிவி தினகரனின் சகோதரி மற்றும் மைத்துனருக்கு சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் சொத்துக்குவிப்பு வழக்கில் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
 
1997-ஆம் ஆண்டு வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் டிடிவி தினகரனின் சகோதரி ஸ்ரீதள தேவி மற்றும் அவரது கணவரும் தினகரனின் மைத்துனருமான பாஸ்கரன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
 
இந்த வழக்கில் இவர்கள் குற்றவாளிகள் என சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் கடந்த 2008-ஆம் ஆண்டு உறுதி செய்யப்பட்டது. வருமானத்துக்கு அதிகமாக ரூ. 1.68 கோடி சொத்து சேர்த்ததாக கூறி பாஸ்கரனுக்கு 5 ஆண்டுகள் சிறையும், ஸ்ரீதள தேவிக்கு 3 ஆண்டுகள் சிறையும் தலா 30 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. இதனையடுத்து இருவரும் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
 
ஆனால் இவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் சரணடையாததால் தற்போது சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இருவருக்கும் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2500 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமனம்.. உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி.. இன்று வெளுத்து கட்டப்போகும் மழை.. சென்னைக்கு எச்சரிக்கை..!

திமுக கொடுத்த வாக்குறுதிகளில் 40 மட்டுமே பரிசீலனையில் உள்ளன: அமைச்சர் தங்கம் தென்னரசு

ஓ.பி.எஸ்., டி.டி.வி. தினகரன், சசிகலாவை ஒருங்கிணைக்க செங்கோட்டையன் திட்டமா? புதிய அதிமுக உதயம்?

டிரம்பிடம் இந்தியாவுக்கு 50% வரி போட சொன்னதே பிரதமர் மோடி தான்: ஆ ராசா

அடுத்த கட்டுரையில்
Show comments