Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மேலதிகாரியை சுட்டுக்கொன்று தானும் தற்கொலை செய்து கொண்ட ராணுவ வீரர் – பல்லாவரத்தில் அதிர்ச்சி சம்பவம் !

மேலதிகாரியை சுட்டுக்கொன்று தானும் தற்கொலை செய்து கொண்ட ராணுவ வீரர் – பல்லாவரத்தில் அதிர்ச்சி சம்பவம் !
, செவ்வாய், 27 ஆகஸ்ட் 2019 (14:31 IST)
சென்னை பல்லாவரத்தில் உள்ள ராணுவக் குடியிருப்பில் மேலதிகாரியை சுட்டுக் கொன்றுவிட்டு தன்னையும் சுட்டுக்கொண்டுள்ளார்.

சென்னை பல்லாவரத்தில் ராணுவ குடியிருப்பில் உத்தராகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பிரவீன்குமார் ஜோஷி வசித்து வந்தார். இவர் சென்னை ராணுவ அகடாமியில் ஹவில்தாராக பணியாற்றி வந்துள்ளார். அங்கு அவருக்குக் கீழ் ரைபிள் மேனாக பணியிலிருந்த ஜெட்ஷீருக்கும் இவருக்கும் இடையில் பணி ரீதியாக சிலகாலமாக பிரச்சனை இருந்துள்ளதாகத் தெரிகிறது.

நேற்று இரவும் இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடந்துள்ளது. அதன் பின்னர் பிரவீன்குமார் ஜோஷி தனது வீட்டுக்கு சென்றுள்ளார். ஆனால் கோபம் தீராத ஜெட்வீர் நள்ளிரவு பிரவின்குமாரின் வீட்டுக்கு சென்று அவரைத் துப்பாக்கியில் சுட்டுள்ளார். அவர் அந்த இடத்திலேயே இறந்துவிட தன்  துப்பாக்கியாலேயேத் தன்னையும் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் இருவரின் உடல்களையும் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இருவரின் கொலை மற்றும் தற்கொலை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அமித்ஷாவுடன் அருண் ஜெட்லி வீட்டிற்கு விரைந்த மோடி