Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக விளம்பரம் பண்ணுது; ஆனாலும் வரவேற்கிறோம்! – அர்ச்சகர் நியமனம் குறித்து அர்ஜுன் சம்பத்!

Webdunia
ஞாயிறு, 15 ஆகஸ்ட் 2021 (12:45 IST)
தமிழகத்தில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டம் குறித்து இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்தது முதல் அனைத்து துறைகளிலும் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களில் அறநிலையத்துறை கோவில் சொத்துகளை மீட்பது, தமிழில் அர்ச்சனை என பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்நிலையில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்தின் கீழ் பலர் அர்ச்சகராக நியமிக்கப்பட்டுள்ளனர், இதற்கு பலரும் ஆதரவையும், பாராட்டையும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் “அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம், தமிழில் வழிபாடு என்பது ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. விளம்பரத்திற்காக தற்போது திமுக செயல்படுத்துகிறது. இருப்பினும் இதனை நாங்கள் வரவேற்கிறோம்” என்று கூறியுள்ளார்.

மேலும் “மத்திய அரசின் நடைமுறைகளால் கொரோனா கட்டுக்குள் வந்துள்ளது. இதில் மாநில அரசின் சாதனை எதுவும் இல்லை” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிரம்ப் வரிவிதிப்பு எதிரொலி: ஆசிய பங்குச்சந்தை எழுச்சி.. ஐரோப்பிய பங்குச்சந்தை வீழ்ச்சி..!

திமுக தேர்தல் வாக்குறுதி எண் 503 என்ன ஆச்சு? சிலிண்டர் விலை குறித்து முதல்வருக்கு அண்ணாமலை பதிலடி..!

நேற்று ‘தியாகி’ பேட்ஜ்.. இன்று கருப்பு சட்டை.. அதிமுக எம்.எல்.ஏக்களால் பரபரப்பு..!

வயது மூத்த பெண்ணோடு தகாத உறவு! சேர்ந்து வாழ விட மாட்றாங்க..! தூக்கில் தொங்கிய காதல் ஜோடி!

தங்கம் விலை மீண்டும் சரிவு.. ரூ.66 ஆயிரத்திற்கும் கீழ் வந்த ஒரு சவரன் விலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments