Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ழகரம் ஏந்திய தமிழணங்கு... ஏ.ஆர்.ரகுமானின் பதிவுக்கு என்ன அர்த்தம்?

ழகரம் ஏந்திய தமிழணங்கு... ஏ.ஆர்.ரகுமானின் பதிவுக்கு என்ன அர்த்தம்?
, சனி, 9 ஏப்ரல் 2022 (08:44 IST)
'இன்பத் தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு நேர்' என்ற வரிகளை ஏ.ஆர்.ரகுமான் தனது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

 
நாடு முழுவதும் மக்கள் இந்தி பேச, படிக்க வேண்டும் என்ற நிலைபாட்டில் பாஜக அரசு தீவிரமாக உள்ளது. எனினும் பல மாநிலங்களில் இந்தி திணிப்பால் தாய் மொழி அழியும் அபாயம் உள்ளதாக பலர் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
 
இந்நிலையில் நாடாளுமன்ற கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பிற உள்ளூர் மொழிகளின் வார்த்தைகளை ஏற்று இந்தி மொழி நெகிழ்வடையாத நிலையில் அது பரவாது. அமைச்சரவையின் 70 சதவீத நிகழ்ச்சி நிரல் இந்தியில் தான் தயாரிக்கப்பட்டுள்ளது. 
 
அலுவல் மொழியான இந்தியை நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது. இந்தி மொழியை உள்ளூர் மொழிகளுக்கு மாற்றாக அல்ல. ஆங்கிலத்திற்கு மாற்றாக ஏற்க வேண்டும் என்று தெரிவித்தர். 
 
இதற்கு கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்ட நிலையில் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் எழுதிய 'தமிழுக்கும் அமுதென்று பேர்' என்ற கவிதையில் வரும், 'இன்பத் தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு நேர்' என்ற வரிகளை ஏ.ஆர்.ரகுமான் தனது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 
 
ஆம், ழகரம் ஏந்திய தமிழணங்கு என்ற வார்த்தைகளை தாங்கிய புகைப்படத்தை அவர் பதிவிட்டிருக்கிறார். அதோடு சமூக வலைத்தளமான டிவிட்டரில் #இந்தி_தெரியாது_போடா,  #இந்தி_வேண்டாம்_போடா, #stopHindiImposition, போன்ற ஹேஷ்டேக்குகள் டிரெண்டாகி வருகின்றன. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இம்ரான்கான் உரை: "இந்திய விவகாரத்தில் இது போல ஒரு அந்நிய சக்தி தலையிட முடியாது"!