Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளைய தேர்வின் வினாத்தாளும் கசிந்தது..! – அதிர்ச்சியில் பள்ளிகள்!

Webdunia
செவ்வாய், 15 பிப்ரவரி 2022 (13:20 IST)
12ம் வகுப்பு திருப்புதல் தேர்வு நடந்து வரும் நிலையில் அடுத்தடுத்து தேர்வுக்கான வினாத்தாள்கள் கசிந்து வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் தற்போது தளர்வுகள் காரணமாக அன்றாடம் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது. 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வும் அறிவிக்கப்பட்டு நடந்து வருகிறது.

தேர்வுகள் நடந்து வரும் நிலையில் முன்னதாக 12ம் வகுப்பு உயிரியல் பாட வினாத்தாள் வெளியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இன்று மீண்டும் வணிக கணிதம் பாடத்தின் வினாத்தாள் வெளியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நாளை 12ம் வகுப்பு நடைபெற உள்ள இயற்பியல் பாடத்திற்கான வினாத்தாளும் தற்போது லீக் ஆனதாக செய்திகள் வெளியாகியுள்ளது. தொடர்ந்து வினாத்தாள்கள் லீக் ஆகி வரும் சம்பவம் பள்ளிகள், ஆசிரியர்கள், பெற்றோர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: தமிழகத்தை விட்டே வெளியேற பரந்தூர் மக்கள் முடிவு..!

முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்.. 80 வயது முதியவரை திருமணம் செய்த 23 வயது இளம்பெண்..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!

வாக்கு எந்திரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்..எலான் மஸ்க் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments