Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்குவது பா.ஜ.க.வின் கடமை - நெல்லையில் அண்ணாமலை உரை

Mahendran
வெள்ளி, 22 ஆகஸ்ட் 2025 (18:34 IST)
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்ட நெல்லை மண்டல பூத் கமிட்டி மாநாட்டில், தமிழக பா.ஜ.க.வின் முன்னாள் தலைவர் அண்ணாமலை உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
 
எடப்பாடி பழனிசாமியை மீண்டும் தமிழக முதலமைச்சராக்குவது பா.ஜ.க.வின் கடமை. அவரை ஆட்சியில் அமர வைக்கும் பொறுப்பு நமது தேசிய ஜனநாயக கூட்டணிக்கு உள்ளது. வரவிருக்கும் 2026 சட்டமன்ற தேர்தலில், நாம் வெற்றி பெற்று இந்த லட்சியத்தை நிறைவேற்ற வேண்டும்.
 
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, தமிழகத்திற்கு பல்வேறு திட்டங்களை கொண்டுவந்து பெருமை சேர்த்து வருகிறது என்றும் அண்ணாமலை கூறினார்.
 
இந்த மாநாட்டில் பா.ஜ.க.வின் மாநில மற்றும் தேசிய நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். அ.தி.மு.க.வுடன் தங்கள் கூட்டணி தொடர்வதையும், வரும் தேர்தலில் தி.மு.க.வை வீழ்த்துவதே தங்கள் இலக்கு என்பதையும் அண்ணாமலை தனது பேச்சு மூலம் உறுதிப்படுத்தினார்.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தலை முன்னிட்டே உலக ஐயப்ப சங்கமம் மாநாடு: காங்கிரஸ் குற்றச்சாட்டு..!

சனாதனம் குறித்த பேச்சு.. மன்னிப்பு கேட்க முடியாது: உதயநிதி ஸ்டாலின்

டிரம்ப்பின் ஈகோ, இந்தியாவுடனான உறவை அழிக்க அனுமதிக்க கூடாது: அமெரிக்க எம்பி எச்சரிக்கை

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அமமுக விலகல்: டிடிவி தினகரன் அறிவிப்பு

பல்லடத்தில் மர்மமான முறையில் இறந்த தெரு நாய்கள்: விஷம் வைத்து கொல்லப்பட்டதா?

அடுத்த கட்டுரையில்
Show comments