அண்ணா பல்கலை. விவகாரம்! சீமான் போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு! - தடையை மீறுமா நாதக?

Prasanth Karthick
செவ்வாய், 31 டிசம்பர் 2024 (09:16 IST)

அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை சம்பவம் தொடர்பாக நாம் தமிழர் கட்சி இன்று நடத்த இருந்த ஆர்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.


 


 

அண்ணா பல்கலைக்கழக வளாகத்திலேயே மாணவி ஒருவர் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மாணவிக்கு நீதி வழங்க கோரியும், திமுகவை கண்டித்தும் போராட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜகவினர் கைது செய்யப்பட்டனர்.

 

தொடர்ந்து நேற்று அதிமுகவினர் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடத்த முயன்றதால் கைது செய்யப்பட்டனர். தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், அண்ணா பல்கலைக்கழக சம்பவம் குறித்து வெளியிட்ட அறிக்கையை தவெக தொண்டர்கள் விநியோகித்த நிலையில் அவர்களும், தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்தும் கைது செய்யப்பட்டார். 
 

ALSO READ: சென்னையில் ரூ.16 கோடி மதிப்புள்ள மெத்தபெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல்! 5 பேர் கைது!

 

இந்நிலையில் இன்று காலை 10 மணியளவில் அண்ணா பல்கலை விவகாரம் தொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருந்ததற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளனர். ஆனால் அனுமதி மறுக்கப்பட்டாலும் போராட்டம் நடத்த நா.த.க தயாராக உள்ளதாக பேச்சுகள் எழுந்துள்ளது.

 

தொடர்ந்து அண்ணா பல்கலை விவகாரத்தில் போராட்டம் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று நாம் தமிழர் கட்சி நடத்த உள்ள ஆர்ப்பாட்டம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாமல்லபுரத்தை சுற்றி பார்க்க இலவசம்!.. தமிழக அரசு அறிவிப்பு!...

ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்க மாட்டோம்.. திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்: விசிக

எக்ஸ் வலைத்தளம் திடீரென முடங்கியதா? விளக்கம் அளிக்காத எலான் மஸ்க்..!

செங்கோட்டை குண்டுவெடிப்பு சதியில் ‘பிரியாணி’ தான் கோட்வேர்டா? அதிர்ச்சி தகவல்கள்!

ஷேக் ஹசீனாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டன வங்கதேச சர்வதேசத்தின் உள்விவகாரம்: சீனா

அடுத்த கட்டுரையில்
Show comments