சென்னையில் ரூ.16 கோடி மதிப்புள்ள மெத்தபெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல்! 5 பேர் கைது!

Prasanth Karthick
செவ்வாய், 31 டிசம்பர் 2024 (09:08 IST)

சென்னையில் உள்ள மாதவரத்தில் ரூ.16 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சென்னை பகுதிகளில் கடந்த சில காலமாக போதைப்பொருள் கடத்தல் அதிகரித்து வரும் நிலையில் காவல்துறை பலரை கைது செய்து வருகிறது. கடந்த வாரம் மியான்மரில் இருந்து மணிப்பூர் வழியாக சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.1.5 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பிடிப்பட்ட நிலையில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

 

அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் சென்னை மாதவரம் பகுதியில் மெத்தபெட்டமைன் என்ற போதை பொருள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீஸார் ரூ.16 கோடி மதிப்புடைய 16 கிலோ மெத்தபெட்டமைன் போதை பொருளை பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

இதுவரை தமிழ்நாட்டில் பிடிபட்ட மெத்தபெட்டமைன் போதை பொருட்களில் இதுவே அதிக அளவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டேன்ஸ் ஆடலாம்.. தெருவுல நடந்தால் விஜய்க்கு முட்டி வலிக்கும்!.. மன்சூர் அலிகான் ராக்ஸ்!...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சிபிஐ விசாரணைக்கு தடை விதித்தது உச்ச நீதிமன்றம்

பிகாரில் வீசும் அதே அலை தமிழகத்திலும் வீசுகிறது: கோவையில் பிரதமர் மோடி பேச்சு

கருமுட்டையை உறைய வைத்து வேலையில் கவனம் செலுத்துங்கள்: ராம்சரண் மனைவியின் சர்ச்சை கருத்து..!

பிரதமர் மோடியின் காலில் விழுந்து ஆசி பெற்ற ஐஸ்வர்யா ராய்.. புகைப்படம் வைரல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments