Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நிதியில்லை.. கைவிடப்பட்டது குழாய் வழியே கிருஷ்ணா நீரை கொண்டு வரும்.. தமிழக அரசு அறிவிப்பு..!

Advertiesment
சென்னை குடிநீர்

Mahendran

, திங்கள், 16 ஜூன் 2025 (10:16 IST)
ஆந்திராவில் இருந்து ராட்சத குழாய்கள் மூலம் தமிழகத்திற்கு குடிநீர் கொண்டு வரும் 15,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டம் கைவிடப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது சென்னை மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
சென்னை மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யப் புதிய நீர் ஆதாரங்களை உருவாக்கும் பணிகள் ஒருபுறம் நடைபெற்று வரும் நிலையில் ஆந்திராவில் உள்ள கண்டலேறு அணையில் இருந்து புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு நேரடியாக குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு வர நீர்வளத் துறை திட்டமிட்டிருந்தது. 
 
இதற்காக 15 ஆயிரம் கோடி ரூபாய் செலவு மதிப்பிடப்பட்ட நிலையில், மூன்று ஆண்டுகளுக்கு முன் இத்திட்டத்திற்கான நிதியை மாநில அரசிடம் தமிழக நீர்வளத் துறை கோரியது. இந்தத் திட்டத்தை செயல்படுத்தினால் ஒரு சொட்டு நீர் கூட வீணாகாமல் சென்னைக்கு கொண்டு வர முடியும் என்ற நிலை இருந்தது.
 
ஆனால், தற்போது நிதிநிலை சரியாக இல்லாததை காரணம் காட்டி, இந்த திட்டத்திற்கு தமிழக அரசு நிதி வழங்கவில்லை. மாநில அரசுக்கு ஏற்கனவே கடன் சுமை அதிகமாக இருப்பதால், உலக வங்கி உள்ளிட்ட பன்னாட்டு வங்கிகளிடமிருந்தும் கடன் பெற முடியவில்லை. எனவே, குழாய் வழியாக கிருஷ்ணா நதி நீரை சென்னைக்கு கொண்டு வரும் திட்டத்தை கைவிடுவது என்ற முடிவுக்கு வந்துள்ளதாக தமிழக நீர்வளத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

லண்டனில் இருந்து சென்னை வந்த விமானத்தில் திடீர் கோளாறு.. அதிர்ச்சியில் பயணிகள்..!