வங்கதேசத்திலிருந்து சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் ஊடுருவிய ரோஹிங்கியாக்கள் இந்தியர்கள் போலவே மாறி வருகிறார்கள் என்பதும், இந்தியர்களின் வேலை வாய்ப்பைப் பறிக்கிறார்கள் என்றும் ஆந்திர மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாண் எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
"ரோஹிங்கியாக்கள் இந்தியாவுக்குள் நுழைந்து உள்ளூர் மக்களின் வேலைகளைப் பறிக்கிறார்கள் என்றும், அதுமட்டுமின்றி அவர்கள் நம்முடைய பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் விடுகிறார்கள் என்றும்," பவன் கல்யாண் கூறியுள்ளார்.
"ரோஹிங்கியாக்கள் இந்தியாவிற்குள் ஊடுருவி இங்கு நிரந்தரமாக குடியேறி வருகிறார்கள் என்றும், அவர்களுக்கு ரேஷன் கார்டுகள், ஆதார் அட்டைகள் மற்றும் வாக்காளர் அட்டைகளையும் வழங்கப்பட்டுள்ளன என்றும், இதற்கு யார் உதவுகிறார்கள், சிஸ்டத்தில் இருக்கும் யாரோ சிலர்தான் அவர்களுக்கு உதவுகிறார்கள், அவர்களைக் கண்டுபிடிக்க வேண்டும் என்றும்," அவர் தெரிவித்துள்ளார்.
"எனவே காவல்துறை மற்றும் அரசு நிர்வாகத்தை விழிப்புடன் இருக்குமாறு நான் அறிவுறுத்தி உள்ளேன் என்றும், ரோஹிங்கியாக்களுக்கு ஆந்திராவில் இடமில்லை என்றும்," அவர் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.