Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமைச்சர் செல்லூர் ராஜூவின் அதிமுக நிகழ்ச்சியில் பங்குபெற்ற கந்துவட்டி அன்புச்செழியன்

Webdunia
திங்கள், 26 பிப்ரவரி 2018 (08:21 IST)
கந்துவட்டிப் புகாரில் சிக்கிய மதுரையைச் சேர்ந்த பைனான்சியர் அன்புச்செழியன், செல்லூர் ராஜூவின் தலைமையில் நடைபெற்ற அதிமுக நிகழ்ச்சியில் பங்குபெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் சசிகுமாரின் உறவினர் அசோக்குமார் சமீபத்தில் கந்துவட்டி கொடுமையால் தற்கொலை செய்து கொண்டார். தனது தற்கொலைக்கு பைனான்சியர் அன்புச்செல்வன் தான் காரணம் என கடிதம் எழுதி வைத்திருந்தார் அசோக்குமார். அன்புச்செழியன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு தலைமறைவான அவரை போலீஸார் தேடி வந்தனர். இதனிடையே அன்புச்செழியன் தன்னுடைய ஜாமீன் மனுவை வாபஸ் பெற்றார்.
 
இந்நிலையில் ஜெயலலிதாவின் 70 வது பிறந்தநாளை முன்னிட்டு, அமைச்சர் செல்லூர் ராஜூவின் தலைமையில் மதுரையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது, இதில் கந்துவட்டி புகாரில் சிக்கிய அன்புச்செழியன் பங்குபெற்றார். அவர் மேடையில் அமர்ந்திருந்தார். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சமீபத்தில் நடைபெற்ற அமைச்சர் செல்லூர் ராஜூவின் குடும்ப நிகழ்ச்சியில் அன்புச்செழியன் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று தவெகவில் இணைந்த அதிகாரி தான் விஜய் வீட்டில் ரெய்டு செய்தவரா? அவரே அளித்த விளக்கம்..!

2 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 11 மாவட்டங்களில் கனமழை.. வானிலை எச்சரிக்கை..!

சவுதி வருவதற்கு இந்தியர்களுக்கு தடை? பாகிஸ்தானுக்கு அனுமதியா? - போர்தான் காரணமா?

பாலியல் "SIR"-களை எப்போது கண்ட்ரோல் செய்யப் போகிறீர்கள்? முதல்வருக்கு ஈபிஎஸ் கேள்வி

தவெகவில் இணைந்த முன்னாள் ஐ.ஆர்.எஸ் அதிகாரி.. முதல் நாளே வழங்கப்பட்ட முக்கிய பதவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments