Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமைச்சர் செல்லூர் ராஜூவின் அதிமுக நிகழ்ச்சியில் பங்குபெற்ற கந்துவட்டி அன்புச்செழியன்

Webdunia
திங்கள், 26 பிப்ரவரி 2018 (08:21 IST)
கந்துவட்டிப் புகாரில் சிக்கிய மதுரையைச் சேர்ந்த பைனான்சியர் அன்புச்செழியன், செல்லூர் ராஜூவின் தலைமையில் நடைபெற்ற அதிமுக நிகழ்ச்சியில் பங்குபெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் சசிகுமாரின் உறவினர் அசோக்குமார் சமீபத்தில் கந்துவட்டி கொடுமையால் தற்கொலை செய்து கொண்டார். தனது தற்கொலைக்கு பைனான்சியர் அன்புச்செல்வன் தான் காரணம் என கடிதம் எழுதி வைத்திருந்தார் அசோக்குமார். அன்புச்செழியன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு தலைமறைவான அவரை போலீஸார் தேடி வந்தனர். இதனிடையே அன்புச்செழியன் தன்னுடைய ஜாமீன் மனுவை வாபஸ் பெற்றார்.
 
இந்நிலையில் ஜெயலலிதாவின் 70 வது பிறந்தநாளை முன்னிட்டு, அமைச்சர் செல்லூர் ராஜூவின் தலைமையில் மதுரையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது, இதில் கந்துவட்டி புகாரில் சிக்கிய அன்புச்செழியன் பங்குபெற்றார். அவர் மேடையில் அமர்ந்திருந்தார். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சமீபத்தில் நடைபெற்ற அமைச்சர் செல்லூர் ராஜூவின் குடும்ப நிகழ்ச்சியில் அன்புச்செழியன் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments