Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆபீசுக்கு வந்த மதுரை அன்பு: அசோக்குமார் தற்கொலை வழக்கு என்ன ஆச்சு?

ஆபீசுக்கு வந்த மதுரை அன்பு: அசோக்குமார் தற்கொலை வழக்கு என்ன ஆச்சு?
, வியாழன், 21 டிசம்பர் 2017 (01:26 IST)
நடிகர் சசிகுமாரின் உறவினர் அசோக்குமார் சமீபத்தில் கந்துவட்டி கொடுமையால் தற்கொலை செய்து கொண்டார் என்பதும் அவரது தற்கொலைக்கு பைனான்சியர் அன்புச்செல்வன் தான் காரணம் என கடிதம் எழுதி வைத்திருந்தார் என்பதும் அனைவரும் அறிந்ததே

இந்த நிலையில் அன்புச்செழியன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு தலைமறைவான அவரை தேட தனிப்படையும் அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை இந்தியாவின் பல நகரங்களில் அன்புச்செல்வனை தேடியதாகவும், அவரை கண்டுபிடிக்க முடியாமல் சென்னை திரும்பியதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் மதுரை அன்பு இன்று தனது அலுவலகத்திற்கு வந்து தனது வழக்கமான அலுவல்களை பார்த்ததாக செய்திகள் கூறுகின்றது. அன்புவை தேடி வந்த தனிப்படை தற்போது என்ன செய்கிறது என்ற கேள்வியும் எழுகிறது. இந்த நிலையில் நீதிமன்றம் அவர் மீது எந்த உத்தரவையும் பிறப்பிக்காததால் அவர் மீதான நடவடிக்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.

ஆர்.கே.நகர் தேர்தல், ஓகி புயல் போன்ற பரபரப்பில் ஊடகங்களும் இந்த செய்தியை மறந்துவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சூர்யாவுக்கு பாடம் எடுப்பாரா மலர் டீச்சர்?