Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

புதுச்சேரியை போல் தமிழகத்தில் பள்ளிகளை திறப்பது எப்போது?

புதுச்சேரியை போல் தமிழகத்தில் பள்ளிகளை திறப்பது எப்போது?
, செவ்வாய், 13 ஜூலை 2021 (11:14 IST)
புதுச்சேரியை போல் தமிழகத்திலும் பள்ளிகளை திறப்பது குறித்து ஆய்வு செய்து முதல்வருக்கு அறிக்கை தரப்படும் என அன்பில் மகேஷ் பேட்டி. 

 
புதுச்சேரியில் வரும் 16 ஆம் தேதி முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்ற கேள்வி எழுந்தது. ஆனால், இம்முறை வெளியான ஊர்டங்கு குறித்த அறிவ்ப்புகளில் பள்ளிகள் திறக்கப்படாது என அறிவிக்கப்பட்டது. 
 
இந்நிலையில், புதுச்சேரியை போல் தமிழகத்திலும் பள்ளிகளை திறப்பது குறித்து ஆய்வு செய்து முதல்வருக்கு அறிக்கை தரப்படும். இதன் பின்னர் முதல்வர் சொல்லும் வழிகாட்டுதல் படி பள்ளிகளை திறக்க முடிவு செய்வோம் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அதிமுக ஆட்சியில் விடப்பட்ட டெண்டர்கள் ரத்து! – சென்னை மாநகராட்சி அறிவிப்பு!