Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் மேலும் ஒரு தற்கொலை

நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் மேலும் ஒரு தற்கொலை
, வியாழன், 6 ஜூன் 2019 (14:58 IST)
நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதி கூனிமேடு கிராமத்தைச் சேர்ந்த மாணவி மோனிஷா இன்று தற்கொலை செய்துகொண்டார்.

நேற்று(புதன்கிழமை) மதியம் இரண்டு மணி அளவில் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ். மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியாகின.

முடிவுகள் வெளியான நிலையில் நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் மன உளைச்சல் காரணமாக நேற்று திருப்பூரை சேர்ந்த ரிதுஸ்ரீ என்ற மாணவி ஒருவரும்,தஞ்சாவூர் மாவட்டம் பட்டுகோட்டையை சேர்ந்த வைஷ்யா என்ற மாணவி ஒருவரும் தற்கொலை செய்து கொண்டனர்.

இந்நிலையில் இன்று காலை மாணவி மோனிஷா,வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

நீட் தேர்வால் தமிழகத்தில் இரண்டு நாட்களில் 3 மாணவிகள் தற்கொலை செய்து கொண்ட நிலையில் பல அரசியல் தலைவர்கள் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஏரியில் மூழ்கிய இஞ்சீனியர்: பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட விபரீதம்