Publish Date: Wed, 08 Feb 2023 (10:45 IST)
Updated Date: Wed, 08 Feb 2023 (10:47 IST)
இனி வரும் நாட்களில் ஆவின் நிறுவன காலியிடங்கள் டிஎன்பிஎஸ்சி மூலமே நிரப்பப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
அனைத்து அரசு பணிகளும் இனி டிஎன்பிஎஸ்சி மூலமே நிரப்பப்படும் என தமிழ்நாடு அரசு சமீபத்தில் சட்டம் இயற்றியது என்பது தெரிந்ததை.
இந்த நிலையில் ஆவின் நிறுவனத்தில் உள்ள மேலாளர், தொழில்நுட்ப வல்லுநர் உள்ளிட்ட அனைத்து காலியான பணிகளும் டிஎன்பிஎஸ்சி முலமே நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அது மட்டுமின்றி மொத்தம் 26 வகையான துறைகளில் உள்ள 322 காலி பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி மூலமே நிரப்பப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது