Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கரூரில் உலகத் தமிழ் காப்புக் கூட்டியக்கம் சார்பில் ஆகம தமிழ் எழுச்சி மாநாடு

Webdunia
சனி, 25 மார்ச் 2023 (21:11 IST)
உயர் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் அனைத்து கோயில்களிலும் தமிழிலேயே குடமுழுக்கு செய்வதற்காக வழிமுறைகளை வகுத்தளிக்க அமைக்கப்பட்டுள்ள குழுவின் பரிந்துரைகளை விரைவில் பெற்று அரசாணை வெளியிட வேண்டும் என  கரூரில் இன்று  உலகத் தமிழ்க் காப்புக் கூட்டியக்கம் சார்பில் நடைபெற்ற ஆகமத் தமிழ் எழுச்சி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றம்.
 
கரூரில் உலகத் தமிழ் காப்புக் கூட்டியக்கம் சார்பில் ஆகம தமிழ் எழுச்சி மாநாடு இன்று நடைபெற்றது.
 
இந்த, மாநாட்டை தஞ்சை தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சி சுப்பிரமணியம், பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் உள்ளிட்டோர் தொடங்கி வைத்தனர். 

தொடர்ந்து பல்வேறு தலைப்புகளில் தமிழ் ஆர்வலர்கள் தமிழில் வழிபாடு செய்வது, தமிழில் குடமுழுக்கு நடத்துவதின் சிறப்புகள், முக்கியத்துவம் குறித்தும் பேசினர்.

மாநாட்டில், உயர் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் அனைத்து கோயில்களிலும் தமிழிலேயே வழிபாடு நடத்தவும், தமிழிலேயே குடமுழுக்கு செய்வதற்காக வழிமுறைகளை வகுத்தளிக்க அமைக்கப்பட்டுள்ள குழுவின் பரிந்துரைகளை விரைவில் பெற்று அரசாணை வெளியிட வேண்டும்.

தமிழகத்தில் அனைத்து வகை பள்ளிகளிலும், தாய் மொழி தமிழிலேயே கற்பிக்கப்பட வேண்டும்,  பள்ளி, கல்லூரிகளில் அனைத்து வகை பாடத்திட்டங களையும் தமிழில் உருவாக்க வேண டும், நீதிமன்றங்களில் தமிழில் வழக்காடுதல்,  8 வது அட்டவணையில் உள்ள 22 மொழிகளையும் ஆட்ணி மொழியாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments