Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நெட்பிளிக்ஸில் வெளியாகும் எதற்கும் துணிந்தவன்.. எப்போது தெரியுமா?

நெட்பிளிக்ஸில் வெளியாகும் எதற்கும் துணிந்தவன்.. எப்போது தெரியுமா?
, வியாழன், 31 மார்ச் 2022 (13:39 IST)
சூர்யா நடிப்பில் மார்ச் 10 ஆம் தேதி ரிலீஸான எதற்கும் துணிந்தவன் திரைப்படம் ஏப்ரல் 7 ஆம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ளது.

கடந்த ஆண்டில் நடிகர் சூர்யா நடிப்பில் த.செ.ஞானவேல் இயக்கத்தில் வெளியான படம் ஜெய்பீம். பழங்குடி இன மக்கள் குறித்த நிஜக்கதையை தழுவிய இந்த படம் பரவலான வரவேற்பை பெற்றதோடு பல்வேறு விருதுகளையும் குவித்தது. ஆனால் இந்நிலையில் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மார்ச் 10 ஆம் தேதி சூர்யா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவான எதற்கும் துணிந்தவன் படம் ரிலிஸானத். இந்த படம் ஆரம்பம் முதல் கலவையான விமர்சனங்களைப் பெற்று வந்தது.

ஆனால் அதே நேரம் வசூலில் சோடை போகவில்லை என்றும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் திரையரங்கில் வெளியாகி ஒரு மாதத்தை நெருங்க உள்ள நிலையில் இப்போது ஓடிடி தளத்தில் பிரீமியர் ஆக உள்ளது. வரும் ஏப்ரல் 7 ஆம் தேதி முதல் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸின் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்திலும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கேஜிஎப் 2 சென்சார் & ரன்னிங் டைம்…. வைரலாகும் புகைப்படம்!