Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தின் 2 நகரங்களுக்கு கூடுதல் விமான சேவை: விமான போக்குவரத்து அமைச்சகம்

Mahendran
திங்கள், 10 மார்ச் 2025 (15:00 IST)
சென்னையில் இருந்து தூத்துக்குடி மற்றும் திருச்சி ஆகிய இரண்டு விமான நிலையங்களுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படும் என விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சென்னையிலிருந்து தமிழகத்தின் மற்ற நகரங்களுக்கு செல்லும் விமான பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதையடுத்து, தூத்துக்குடி மற்றும் திருச்சி உள்ளிட்ட விமான நிலையங்களுக்கு செல்லும் பயணிகளுக்கு வசதியை கருத்தில் கொண்டு கூடுதல் விமானங்கள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு ஏற்கனவே தினமும் 8 விமான சேவைகள் உள்ளன. அதேபோல் சென்னையில் இருந்து திருச்சிக்கு 14 விமான சேவைகள் உள்ளன. இந்த நிலையில், சென்னை – தூத்துக்குடி இடையே இனி 12 விமான சேவையாகவும்
சென்னை – திருச்சி இடையே 22 விமான சேவையாகவும் அதிகரிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த கூடுதல் சேவை மார்ச் 30ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்றும் விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளக்காதலனுடன் மனைவி உல்லாசம்.. ஆன் தி ஸ்பாட்டில் மூக்கைக் கடித்து துப்பிய கணவன்!

மீண்டும் வெடித்து சிதறியது எலான் மஸ்க்கின் ஸ்டார்ஷிப் ராக்கெட்.. இம்மாத இறுதியில் இன்னொரு ராக்கெட்..!

பள்ளி சிறுமி பலி! கனரக வாகனங்களுக்கு தீவிர நேரக் கட்டுப்பாடு! - சென்னை கமிஷனர் உத்தரவு!

ஏடிஜிபி ஜெயராம் இடைநீக்கம்: தமிழக அரசு திட்டவட்டம் - உச்ச நீதிமன்றத்தில் பதில்!

2013ல் ஏற்பட்ட கேதார்நாத் வெள்ளம்.. 12 ஆண்டுகளாக அடையாளம் கண்டுபிடிக்க முடியாத 702 உடல்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments