Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அம்மாவையே கொன்றவர்களுக்கு இது சாதாரணம் - நடிகை ஆர்த்தி டிவிட்

Advertiesment
Actres aarthi
, வியாழன், 24 மே 2018 (12:38 IST)
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தது தொடர்பாக நடிகை ஆர்த்தி கருத்து தெரிவித்துள்ளார்.

 
தூத்துக்குடியில் நடந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நேற்று முன்தினம் போராட்டக்காரர்களை கலைக்க துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் 11 பேர் பலியாகிய நிலையில் நேற்றும் இரண்டாவது நாளாக துப்பாக்கி சூடு நடந்தது.  
 
இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 22 வயது இளைஞர் ஒருவர் பலியாகிய நிலையில் மேலும் ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சையின் பலனின்றி அவரும் இறந்ததால் கடந்த இரண்டு நாட்களில் பலியானவர்களின் எண்ணிக்கை 13ஆக உயர்ந்துள்ளது. இது தமிழகத்தில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்நிலையில், நடிகர், நடிகைகள், நெட்டிசன்கள் என பலரும் சமூக வலைத்தளங்களில் இதைக் கண்டித்து கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
 
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை ஆர்த்தி தனது டிவிட்டர் பக்கத்தில்  அம்மாவையே கொன்றவர்களுக்கு சாமானிய மக்களை கொல்வது கஷ்டமா?” என பதிவை இட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எடப்பாடி பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு