Publish Date: Tue, 26 Feb 2019 (18:41 IST)
Updated Date: Tue, 26 Feb 2019 (18:44 IST)
அதிமுக உடன் கூட்டணி வைத்ததால் மன வருத்தம் அடைந்த நடிகர் ரஞ்சித் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதையடுத்து பாமக துணை தலைவர் பதவியை அவர் ராஜினாமா செய்தார்.
அதிமுக கூட்டணியில் பாமக இணைந்தது தொடர்பாக அதிருப்தி தெரிவித்த ரஞ்சித், பாமகவில் இணைத்து கொண்டதில் வேதனை அடைகிறேன் . மதுக்கடைக்கு எதிராக போராடியர்கள் எப்படி மதுக்கடை நடத்துபவர்களிடம் கூட்டணி வைத்துள்ளனர்.
மக்களுக்கு செயலாற்றவே அரசியலுக்கு வந்தேன் என தெரிவித்தார். இதற்கிடையில் பாமக இரண்டாம் கட்ட தலைவர் அடுத்தடுத்து ராஜினாமா செய்வார்கள் என அமமுக வின் செய்தி தொடர்பாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.