Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நட்சத்திர ஹோட்டலில் அதிரடி ரெய்டு ...பல லட்சம் மதிப்புள்ள காயின் பறிமுதல்...

Webdunia
ஞாயிறு, 3 பிப்ரவரி 2019 (18:03 IST)
ஊட்டி நட்சத்திர ஹோட்டலில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் கேசினோ ராயல் சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர், அங்கு ரூ.45 லட்சம் மதிப்புள்ள காயின்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகிறது.
ஊட்டி அருகே தொட்டபெட்டா பகுதியில் உள்ளது. இந்த ஓட்டலில் மும்பை, கோவா போன்ற இடங்களில் நடைபெறும் கேசினோ ராயல் சூதாட்டம் இங்கு நடைபெறுவதாவும், கர்நாடகா தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் இருந்து வந்து  சூதாடுவதாகவும் போலீஸாருக்கு தகவல் வந்தது.
 
இதனையடுத்து நேற்று நள்ளிரவில் போலீஸார் அந்த ஹோட்டலில் அதிரடி சோதனை நடத்தினர்.அப்போது தனிப்படை போலிஸார் சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.குறிப்பாக அவர்களிடமிருந்து சீட்டுக்கட்டுகள் 2 கார்கள், மேலும் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட காயின்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதன் மதிப்பு சுமார் ரூ.45 ஆயிரம் ஆகும்.
 
மேலும் கைது செய்தவர்களிடம்  போலீசார்  தீவிரமாக விசாரித்து வருவதாக தகவல் வெளியாகின்றன. 
 
ஊட்டியில் பிரபல ஹோட்டலில் சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவிலேயே மிகப்பெரிய சோஷியல் மீடியா படை தவெக தான்: விஜய் பெருமிதம்..!

பேருந்துக்காக காத்திருந்த இந்திய மாணவி சுட்டுக்கொலை.. கனடாவில் அதிர்ச்சி சம்பவம்..!

தீர்மானங்கள் போட்டால் போதாது, மத்திய அரசுடன் இணக்கமாக இருக்க வேண்டும்: நயினார் நாகேந்திரன்

எதற்காக முதல்வருக்கு இவ்வளவு பதற்றம்.. அவுட் ஆப் கண்ட்ரோல் குறித்து தமிழிசை..!

அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு விருந்து வைக்கும் ஈபிஎஸ்.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments