Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உடுமலை கௌசல்யா அரசு பணியிலிருந்து சஸ்பெண்ட் ...அரசு நடவடிக்கை...

உடுமலை கௌசல்யா அரசு பணியிலிருந்து சஸ்பெண்ட் ...அரசு நடவடிக்கை...
, சனி, 2 பிப்ரவரி 2019 (14:29 IST)
கடந்த 2016 ஆம் ஆண்டு சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட சங்கர், கௌசல்யா தம்பதியினர் மீது கௌசல்யாவின் உறவினர்கள் கொடுரமாக தாக்குதல் நடத்தினர். இதில் சங்கர் படுகொலை செய்யப்பட்டார். கௌசல்யா சில வெட்டுக் காயங்களுடன் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டார். தமிழகம் முழுவதும் இந்த ஆணவப்படுகொலை பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது.அதன் பின்னர் கௌசல்யாவுக்கு மத்திய அரசு பணி வழங்கியது.
இதனையடுத்து  கௌசல்யா ஆணவப்படுகொலைகளுக்கு எதிராக தற்போது குரல் கொடுத்து வருகிறார். இவர் சமீபத்தில் சக்தி என்பவரை மறுமணம் செய்து கொண்டார். 
 
இந்நிலையில் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அவர் பேட்டி அளிக்கையில் , இந்தியாவையும் , அரசியலமைப்புச் சட்டத்தையும் மிகக்கடுமையாக விமர்சித்தார்.
 
இந்நிலையில் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக கௌசல்யா குன்னூர் வெலிங்டன் கண்டொன்மெண்ட் பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகின்றன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகர் அஜித்துக்கு ஆலோசகர் பணி... ! அண்ணா பல்கலைக்கழகம் அழைப்பு...