Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்தது உண்மைதான் : ஒப்புக்கொண்ட கோவை புனிதா

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்தது உண்மைதான் : ஒப்புக்கொண்ட கோவை புனிதா
, சனி, 4 ஆகஸ்ட் 2018 (16:10 IST)
கோவை கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்தது உண்மைதான் என விடுதி வார்டன் புனிதா போலீசாரிடம் ஒப்புக்கொண்டார் என செய்திகள் வெளியாகியுள்ளது.

 
கோவையில் தனியார் விடுதி ஒன்றில் தங்கியிருந்த கல்லூரி மாணவிகளை பணத்தாசை காட்டி தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயன்றதாக அந்த விடுதியின் வார்டன் புனிதா என்பவர் மீது கடந்த சில நாட்களுக்கு முன் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
 
இதனையடுத்து வார்டன் புனிதா மற்றும் விடுதியின் உரிமையாளர் ஜெகந்தாதன் ஆகிய இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில் இருவரும் தலைமறைவாகினர். புனிதா, ஜெகந்நாதன் ஆகிய இருவரையும் பிடிக்கும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டிருந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தலைமறைவாக இருந்த விடுதி உரிமையாளர் ஜெகந்நாதன், ஆலங்குளம் கிணறு ஒன்றில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார்.
webdunia

 
அதையடுத்து, கடந்த 1ம் தேதி  வார்டன் புனிதா கோவை நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். சரண் அடைந்த புனிதாவிடம் ஜெகந்நாதன் மரணம் குறித்தும் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து சென்ற விவகாரம் குறித்து போலிசார் விசாரணை செய்து வந்தனர்.
 
இந்நிலையில், போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்தது உண்மைதான் என புனிதா ஒப்புக்கொண்டார் என தற்போது செய்திகள் வெளிவந்துள்ளது. அவர் அளிக்கும் வாக்குமூலத்தில் இன்னும் பல உண்மைகள் வெளியே வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கேரள முதல்வரை கத்தியால் குத்த முயன்ற நபர் கைது!