ஆத்தூர் தொகுதி அதிமுக வேட்பாளருக்கு கொரோனா தொற்று: மருத்துவமனையில் அனுமதி!

Webdunia
திங்கள், 12 ஏப்ரல் 2021 (14:01 IST)
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா இரண்டாம் அலை மிக வேகமாக பரவி வருகிறது என்பதும் இந்த அலை காரணமாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு வருகிறது என்பதும் தெரிந்ததே.
 
மேலும் தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமல் முகக் கவசம் அணியாமல் இருந்ததால் தான் இந்த அளவுக்கு தீவிரமாக கொரோனா பரவி வருவதாக கூறப்படுகிறது
 
மேலும் தேர்தல் காரணமாக தேர்தல் பிரச்சாரம் செய்த வேட்பாளர்களுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. ஏற்கனவே காங்கிரஸ் வேட்பாளர் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில் மேலும் சில வேட்பாளர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் 
 
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி ஆத்தூர் தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெய்சங்கர் என்பவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை செய்து வருகிறார்கள் நம் தகவல்கள் வெளிவந்துள்ளன

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏ.சி. பெட்டியில் டிக்கெட் இல்லாமல் பயணித்த ஆசிரியை; பரிசோதகரை மிரட்டி வாக்குவாதம்..!

உயரதிகாரிகளின் டார்ச்சரால் மன உளைச்சல்: மனைவிக்கு உயில் எழுதி வைத்துவிட்டு ஐபிஎஸ் அதிகாரி தற்கொலை..!

'கை’ நம்மை விட்டு போகாது.. பாஜக புது அடிமையை தேடும்.. காங்கிரஸ், தவெக குறித்து உதயநிதி..!

விமான பணிப்பெண்கள் கொடுத்த உணவை சாப்பிட்ட மருத்துவர் பலி.. மூச்சுத்திணறல் என தகவல்..!

160 கிமீ வேகத்தில் செல்லலாம்! தாம்பரம் - செங்கல்பட்டு 4வது இருப்புப்பாதை! - ரயில்வே தீவிரம்!

அடுத்த கட்டுரையில்
Show comments