Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆத்தூர் தொகுதி அதிமுக வேட்பாளருக்கு கொரோனா தொற்று: மருத்துவமனையில் அனுமதி!

Webdunia
திங்கள், 12 ஏப்ரல் 2021 (14:01 IST)
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா இரண்டாம் அலை மிக வேகமாக பரவி வருகிறது என்பதும் இந்த அலை காரணமாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு வருகிறது என்பதும் தெரிந்ததே.
 
மேலும் தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமல் முகக் கவசம் அணியாமல் இருந்ததால் தான் இந்த அளவுக்கு தீவிரமாக கொரோனா பரவி வருவதாக கூறப்படுகிறது
 
மேலும் தேர்தல் காரணமாக தேர்தல் பிரச்சாரம் செய்த வேட்பாளர்களுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. ஏற்கனவே காங்கிரஸ் வேட்பாளர் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில் மேலும் சில வேட்பாளர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் 
 
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி ஆத்தூர் தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெய்சங்கர் என்பவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை செய்து வருகிறார்கள் நம் தகவல்கள் வெளிவந்துள்ளன

தொடர்புடைய செய்திகள்

இன்றிரவு 27 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மோடி குறித்து பெருமையாக பதிவு செய்த ராஷ்மிகா மந்தனா.. பிரதமரின் நெகிழ்ச்சியான ரிப்ளை..!

ஆர்ப்பரித்த அருவி வெள்ளம்.. அடித்து செல்லப்பட்ட சிறுவன்! அலறி ஓடிய சுற்றுலா பயணிகள்! – தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்!

சென்னையில் செல்ஃபோன் ஆப் மூலமாக போதை மாத்திரை விற்பனை.. ஒரு அட்டை ரூ.2000.!

தவறை உணர்ந்துவிட்டேன்.. பெண் போலீசார் குறித்து பேசியது தவறுதான்: சவுக்கு சங்கர் வாக்குமூலம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments