Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி ஆலோசனை - தமிழகத்தில் அடுத்து என்ன?

தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி ஆலோசனை - தமிழகத்தில் அடுத்து என்ன?
, திங்கள், 12 ஏப்ரல் 2021 (12:31 IST)
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். 

 
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பின் இரண்டாம் அலை வேகமெடுத்துள்ள நிலையில் தமிழக அரசு முக்கிய கட்டுப்பாடுகளை சமீபத்தில் அறிவித்தது. எனினும் பல இடங்களில் மக்கள் கொரோனா விழிப்புணர்வின்றி பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
 
தற்போது தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் தற்காலிக பொறுப்பில் இருக்கும் அரசு ஆட்சியே நடைபெறும் என்ற நிலையில் கொரோனா காரணமாக முதல்வர் முக்கிய முடிவுகள் எடுக்க தேர்தல் ஆணையம் தளர்வுகள் வழங்கியுள்ளது. 
 
அதன்படி, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். இதில் மூத்த அமைச்சர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சித்திரை திருவிழா நடத்த சொல்லி நாட்டுப்புறக் கலைஞர்கள் மதுரையில் போராட்டம்!