Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆளுங்கட்சி திமுக தான்: அதிமுக கூட்டணிக்கு 50 தொகுதிகள் கூட கிடைக்காது: பிரசாந்த் கிஷோர் பேட்டி

Webdunia
திங்கள், 12 ஏப்ரல் 2021 (14:00 IST)
நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக தான் ஆளும் கட்சி என்றும் அதிமுக கூட்டணிக்கு 50 தொகுதிகள் கூட கிடைக்காது என்றும் பிரசாந்த் கிஷோர் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் 
 
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற்றது என்பதும் இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் மே இரண்டாம் தேதி எண்ணப்பட உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் திமுகவுக்கு தேர்தல் வியூகம் வகுத்து கொடுத்த பிரசாந்த்கிஷோர் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது திமுக கூட்டணி கண்டிப்பாக ஆளும் கட்சியாகவும் என்றும், அதிமுக கூட்டணிக்கு மொத்தம் 50 இடங்கள் கூட கிடைக்காது என்றும் தமிழகத்தில் தான் வகுத்துக் கொடுத்த திட்டங்களை பார்த்து அதிமுக கூட்டணி அஞ்சியதாகவும் அவர் குறிப்பிட்டார் 
 
அதேபோல் மேற்கு வங்கத்தில் பாஜக கூட்டணிக்கு 100 தொகுதிகள் கூட கிடைக்காது என்றும் பாஜகவுக்கு நிச்சயம் மேற்கு வங்கத்தில் மிகப்பெரிய தோல்வி கிடைக்கும் என்பதை என்னால் உறுதியாக கூறமுடியும் என்றும் கூறினார். மம்தா பானர்ஜி மேற்கு வங்கத்தில் மீண்டும் முதல்வர் ஆவார் என்றும் அவரை இப்போதைக்கு மேற்கு வங்க மாநிலத்தில் யாரும் அசைக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார். இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடையும் கட்டணமில்லா பயண அட்டைகள்.. அதன் பிறகு என்ன ஆகும்?

அமெரிக்காவில் இருந்து விரட்டியடிக்கப்படும் இந்தியர்கள்.. அடுத்த விமானம் எப்போது?

20லி குடிநீர் கேன்களை 50 முறைகளுக்கு பயன்படுத்தினால்... உணவு பாதுகாப்பு துறை எச்சரிக்கை..!

திருமலை திருப்பதி கோவிலில் இந்துக்களுக்கு மட்டுமே வேலை: சந்திரபாபு நாயுடு அறிவிப்பு..!

ஸ்டாலின் கூட்டும் தொகுதி மறுசீரமைப்பு கூட்டு நடவடிக்கை குழு..மம்தா பானர்ஜி புறக்கணிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments