Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

திருமணமான 15 நாளில் மனைவியின் தங்கையை கடத்தி, பலாத்காரம் செய்த இளைஞர் கைது!

திருமணமான 15 நாளில் மனைவியின் தங்கையை கடத்தி, பலாத்காரம் செய்த இளைஞர் கைது!
, திங்கள், 4 மார்ச் 2019 (10:56 IST)
திருவள்ளூர் : திருமணமான 15 நாட்களில் மனைவியின் தங்கையை கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். 


 
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த தேர்வழி பகுதியை சேர்ந்தவர் அஜித்குமார். அந்த பகுதியில் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவருக்கும், எருக்குவாய் கிராமத்தை சேர்ந்த  பெண்ணுக்கும், கடந்த மாதம் 15ம் தேதி திருமணம் நடைபெற்றது.
 
இந்நிலையில் அஜித்குமார் மனைவியின் 13 வயது தங்கை திடீரென மாயமானார். இதுதொடர்பாக  சிறுமியின் பெற்றோர் போலீசாரிடம் புகார் அளித்தனர். போலீசார் மேற்கொண்ட விசாரணையில், சிறுமியை அஜித்குமார் கடத்திச் சென்று, செல்போன் கடையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், அஜித் குமாரை கைது செய்தனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும் ஆலோசனையில் விஜயகாந்த் – கிளைமேக்ஸை நெருங்கும் கூட்டணி !