Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருமணத்துக்கு மறுத்த மாணவி! – தாய் செய்த அதிர்ச்சி காரியம்!

Webdunia
திங்கள், 30 டிசம்பர் 2019 (12:55 IST)
திருமணத்துக்கு மறுத்த 10வது படிக்கும் சிறுமியை தாயே அடித்து துன்புறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலத்தை சேர்ந்த கூலி தொழிலாளி ஒருவரின் மகள் 10ஆம் வகுப்பு படித்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு மாணவியின் வீட்டிற்கு வந்த தினேஷ் ரூபன் என்பவர் மாணவியை மணந்து கொள்ள ஆசைப்பட்டிருக்கிறார். இதுகுறித்து மாணவியின் பெற்றோரிடமே கூறியிருக்கிறார். ஆனால் மாணவியும், அவரது தந்தையும் இதற்கு ஒத்துக்கொள்ளவில்லை.

இதனால் மாணவியின் தாயாரிடம் நைச்சியமாக பேசிய தினேஷ் ரூபன் திருமணத்திற்கு மாணவியை சம்மதிக்க வைக்க சொல்லியிருக்கிறார். மாணவியை திருமணத்திற்கு சம்மதம் சொல்ல வைக்க மாணவியின் தாய் தொடர்ந்து அவரை துன்புறுத்தி வந்திருக்கிறார். இந்நிலையில் நேற்று இந்த திருமண விவகாரம் பெரிதாகவே கோபத்தில் தாயே மகளுக்கு பல இடங்களில் சூடு வைத்துள்ளார். தனது மனைவி செய்யும் கொடுமைகளை கண்டு தாங்க முடியாத தந்தை போலீஸாரிடம் சென்று புகார் அளித்துள்ளார்.

புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸார் மாணவியின் தாயாரையும், தினேஷ் ரூபனையும் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஆடி காா்த்திகை விரதம்: முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு.. குவிந்த பக்தர்கள்..!

இன்றிரவு கொட்டப்போகுது கனமழை.. சென்னை உள்பட 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

சேலத்தில் தவெகவின் முதல் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்: தேதி அறிவிப்பு..!

தீர்ப்புகள் தயாரிக்க AI தொழில்நுட்பம் பயன்படுத்தலாமா? கேரள உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

துணை முதல்வர் நயினார் நாகேந்திரன்.. மேடையில் அறிவித்த பெண் பாஜக தொண்டரால் சலசலப்பு..!

அடுத்த கட்டுரையில்