Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இன்னும் ஒரு வாரத்துக்கு மழை பெய்யுமாம்..

Advertiesment
தமிழகம்
இன்னும் ஒரு வாரத்திற்கு தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் ஆங்காங்கே பல பகுதிகளில் மழை பெய்து வந்தது. நேற்று இரவு மற்றும் இன்று காலையில் சென்னையில் லேசான மழை பெய்தது.

இந்நிலையில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழகத்தின் சில இடங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் ஒரு வாரத்திற்கு தமிழகத்தில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வேகமாக சென்ற கார்.. வெளியே விழுந்த குழந்தை! – பதற செய்யும் வீடியோ!