Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பல இடங்களில் மறுவாக்குப் பதிவு! – இரண்டாம் கட்ட உள்ளாட்சி தேர்தல்!

பல இடங்களில் மறுவாக்குப் பதிவு! – இரண்டாம் கட்ட உள்ளாட்சி தேர்தல்!
, திங்கள், 30 டிசம்பர் 2019 (09:29 IST)
தமிழகத்தில் ஊராட்சி உள்ளாட்சி அமைப்புகளுக்கான இரண்டாம் கட்ட தேர்தல் காலை தொடங்கி பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

ஊராட்சி உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த 27ம் தேதி முடிவடைந்த நிலையில், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி விமரிசையாக நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் வாக்களிக்க ஆர்வமாக வந்து வரிசைகளில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

கடந்த முதற்கட்ட தேர்தலில் பல வாக்குச்சாவடிகளில் சின்னம் இடம் பெறாமல் இருந்தது, சின்னம் மாறி இருந்தது, வாக்குசீட்டுகள் வார்டு மாறி வந்தது, ஏற்கனவே முத்திரை குத்தப்பட்டிருந்தது என பல்வேறு பிரச்சினைகளால் பல இடங்களில் தேர்தல் தடைப்பட்டது. இந்நிலையில் தேர்தல் தடைப்பட்ட இடங்களில் இன்று மீண்டும் மறுவாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது.

மதுரை, புதுக்கோட்டை, நாகப்பட்டிணம், தருமபுரி, தூத்துக்குடி உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள ஒரு சில வார்டுகளில் மட்டும் மறுவாக்கு பதிவு நடைபெற்று வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கோலம் போடுவதற்கு பதிலாக ஓட்டு போட்டிருக்கலாமே: திமுகவினர்களுக்கு நெட்டிசன்கள் கேள்வி!