சென்னையிலிருந்து 165 பயணிகளுடன் சென்ற விமானத்தில் திடீர் கோளாறு! நடுவானில் பரபரப்பு!

Prasanth K
புதன், 17 செப்டம்பர் 2025 (09:19 IST)

சென்னை விமான நிலையத்தில் இருந்து 165 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் தொழில்நுட்ப கோளாறை சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

சென்னை உள்நாட்டு விமான சேவை முனையத்தில் இருந்து 165 பயணிகளுடன் விமானம் ஒன்று பெங்களூர் நோக்கி புறப்பட்டது. ஆனால் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விமானத்தில் ஏதோ தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்ட நிலையில் உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அதை தொடர்ந்து வானில் வட்டமடித்து திரும்பிய விமானம் மீண்டும் சென்னை விமான நிலையத்திலேயே வந்து தரையிறங்கியது. இந்த அவசர தரையிறக்க ஏற்பாடுகளால் பிற விமானங்கள் தாமதமாகின. பின்னர் விமானத்தில் இருந்த பயணிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டு மாற்று விமானத்தில் பெங்களூருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

SIR-க்கு பின் ஓட்டு இல்லாதவர்கள் என்ன செய்ய வேண்டும்?!... வாங்க பார்ப்போம்..

ஓசூரில் காவேரி கூக்குரல் சார்பில் ‘ஒரு முறை நடவு, ஆயுள் முழுவதும் வரவு’ கருத்தரங்கு: மத்திய வேளாண்துறை அமைச்சர் பங்கேற்பு..!

வெள்ளை மாளிகையில் டிரம்ப் வைத்த கிறிஸ்துமஸ் விருந்து.. ’தசாவதாரம் பட நடிகை பங்கேற்பு..!

சென்னை வரைவு வாக்காளர் பட்டியல்.. கொளத்தூரில் 1 லட்சம்.. சேப்பாக்கத்தில் 89 ஆயிரம் பெயர்கள் நீக்கம்..!

வங்கதேசம் போல் தான் மேற்குவங்கமும் உள்ளது.. சட்டம் ஒழுங்கு குறித்து பாஜக விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments