Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இப்படியுமா 'ஒரு தலைவர் 'பேசுவார்..?ஸ்டாலினைக் கிண்டலடித்த ஜெயக்குமார்...

Webdunia
புதன், 20 பிப்ரவரி 2019 (14:06 IST)
அதிமுக கூட்டணியில் பாஜக - பாமக ஆகியக் கட்சிகள் இணைவது வெறும் யூகங்களாகவே இருந்தது. ஆனால் நேற்று காலையியில்  அதிமுகவுடன் கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது பாமக. அந்தக் கட்சிக்கு மக்களவைத் தேர்தலில் 7 தொகுதிகளை ஒதுக்கியுள்ளதாகவும் மாநிலங்களவைத் தேர்தலில் 1 தொகுதியும் ஒதுக்கியுள்ளதாகத் தெரிவித்தது. அதையடுத்து சில மணி நேரங்களில் பாஜக வுடனான கூட்டணிப் பேச்சுவார்த்தையை முடித்து 5 தொகுதிகளைக் கொடுத்து டீலை முடித்தது.
இந்நிலையில் இந்தக் கூட்டணி  குறித்து ஸ்டாலின் கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார்.நேற்று வேலூர் அருகே ஆம்பூரில் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில்  ஸ்டாலின் பேசியதாவது:
 
பணத்துக்காக இணைந்துள்ள கூட்டணிதான் அதிமுக - பாமக இடையேயான கூட்டணி ஆகும்.மக்களின் நலனுக்காக இல்லாமல் பணத்துக்காக சேர்ந்துள்ள கூட்டணி அது.ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர் செல்வத்தை விமர்சித்தவர் ராமதாஸ். அதிமுகவின் கதை என்ற பெயரில் அரசை விமர்சித்து அண்மையில்தான் புத்தகம் வெளியிட்டவர் அதே கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளார். 
7 மக்களவைத் தொகுதிகள், ஒரு ராஜ்யசபா சீட் மட்டுமின்றி வேறு எதோகூட இதன் பின்னணியில்  உள்ளது. தமிழக மக்களைப் பற்றி கவலைப்படாமல் பணத்துக்காக அதிமுகவுடன் கூட்டணி  அமைத்துள்ளதாக  அதிமுகவுடான பாமகவின் கூட்டணி பற்றி ஸ்டாலின் கடுமையாக விமர்சனம் தெரிவித்தார்.
 
ஸ்டாலினின் விமர்சனத்துக்கு பதிலளித்து  அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளதாவது:
 
பாமக தலைவர் ராமதாஸ் குறித்து முக.ஸ்டாலின் பேசியவை எல்லாம் ஒரு அரசியல் கட்சித் தலைவர் பேசக்கூடியதாக இல்லை. மேலும் சந்தர்ப்பவாதத்தை பற்றியும், கூட்டணி மாறுவது குறித்தும் பேசுவதற்கு திமுகவிற்கு தகுதி இல்லை. தற்போது அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமைந்துள்ள விரக்தியில்தான் ஸ்டாலின் இவ்விதம் பேசி வருகிறார். 

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments