Publish Date: Fri, 15 Apr 2022 (15:03 IST)
Updated Date: Fri, 15 Apr 2022 (15:05 IST)
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: அதிமுக முன்னாள் எம்.எல்.ஏவிடம் விசாரணை
தமிழகத்தையே பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் முன்னாள் அதிமுக எம்எல்ஏ இடம் விசாரணை நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கொடநாடு பகுதியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களாவில் 2017ஆம் ஆண்டு திடீரென ஒரு மர்ம கும்பல் சென்று காவலாளியை கொலை செய்தது என்பதும் அதன் பிறகு அந்த பங்களாவில் உள்ள பொருட்களை கொள்ளையடித்து சென்றதாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டது
இந்த வழக்கு குறித்து கடந்த 5 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில் கொடநாடு கொலை கொள்ளை வழக்கு குறித்து அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டியுடன் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தகவல் தெரிவித்துள்ளார்
Mahendran
Publish Date: Fri, 15 Apr 2022 (15:03 IST)
Updated Date: Fri, 15 Apr 2022 (15:05 IST)