Webdunia - Bharat's app for daily news and videos

Install App

7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த 65 வயது முதியவர் கைது

Webdunia
திங்கள், 16 ஏப்ரல் 2018 (11:28 IST)
விருதுநகரில் 65 வயது முதியவர் ஒருவர் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டில் பெண்கள் மீதான பாலியல் தொல்லைகள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக சிறுமிகள் பெருமளவில் பாலியல் சீண்டல்களுக்கு ஆளாக்கப்படுகிறார்கள்.
 
காஷ்மீர் மாநிலம் கத்துவா மாவட்டத்தில் 8 வயது சிறுமி கற்பழித்து கொலை, ஒடிசாவில் 9 வயது சிறுமி கற்பழித்து கொலை,   உத்தரபிரதேசத்தில் இளம் பெண் கொடூரமாக கற்பழிக்கப்பட்ட சம்பவமும் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் விருதுநகர் பர்மா காலணியை சேர்ந்த 7 வயது சிறுமி தெருவில் விளையாடிக் கொண்டொருக்கும் போது, அதே தெருவை சேர்ந்த 65 வயது முதியவர், சாக்லெட் வாங்கித் தருவதாக கூறி, தன் வீட்டிற்கு அழைத்து சென்று, பாலியல் தொல்லை அளித்துள்ளார்.
 
இதனையடுத்து வீட்டிற்கு சென்ற சிறுமி இதுகுறித்து பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் முதியவரை கைது செய்துள்ள போலீஸார், அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

நாய்கள் மட்டுமல்ல, மாடுகள் வளர்த்தாலும் லைசென்ஸ் வேண்டுமா? சென்னை மாநகராட்சி அதிரடி

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு.. புயலாக மாறுமா? வானிலை மையம் தகவல்..!

முதல்முறையாக வாக்களித்த நடிகர் அக்சய்குமார்.. யாருக்கு வாக்கு என பேட்டி..!

விவசாயி வங்கிக் கணக்குக்கு திடீரென வந்த ரூ.9900 கோடி! என்ன நடந்தது?

ஸ்வாதி மாலிவால் பாஜக-வில் இணைகிறாரா? ஜேபி நட்டாவிடம் மறைமுக பேச்சுவார்த்தையா?

அடுத்த கட்டுரையில்