Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிட்னியில் பயங்கர காட்டுத் தீ: மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு வெளியேற்றம்

Webdunia
திங்கள், 16 ஏப்ரல் 2018 (11:27 IST)
ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி மாகாணத்தில் ஏற்பட்ட பயங்கர காட்டுத் தீ விபத்தால் அங்குள்ள மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு வெளியேற்றப் பட்டுள்ளனர்.
 
சிட்னியில் கடந்த சனிக்கிழமை புற்கள் அதிகம் இருக்கும் காட்டு பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. காற்று அதிகம் விசும் பகுதி என்பதால் தீ வேகமாக பரவியது.
இந்த தீ விபத்தால் சுமார் 2,500 ஏக்கர் நிலப்பரப்பு நாசம் அடைந்துள்ளது. தீயணைப்பு வீரர்கள் 500-க்கும் மேற்பட்டோர் தீயை கட்டுக்குள் கொண்டு வர கடுமையாக போராடி வருகின்றனர்.
 
மேலும், தீ மக்கள் வசிக்கும் இடத்துக்கு பரவ வாய்ப்புள்ளதால், அங்குள்ள மக்களை பாதுகாப்பான பகுதிக்கு வெளியேறும்படி ஆஸ்திரேலியா அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த விபத்தால் காயமோ, உயிரிழப்போ ஏதும் இல்லையென கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முஸ்லீம் நாட்டுடன் 12 முக்கிய ஒப்பந்தத்தை செய்த இந்தியா.. பாகிஸ்தான், துருக்கி அதிர்ச்சி..!

இந்தியா எங்கள் நட்பு நாடு.. இடைக்கால அதிபருக்கு எதிரான கருத்தை வெளியிட்ட வங்கதேச ராணுவ தளபதி..!

பாகிஸ்தான் - பங்களாதேஷ் பார்டருக்கு சென்றாரா யூடியூபர் ஜோதி? உள்துறை செயலாளர் திடுக் தகவல்..!

இந்தியாவை முந்தியது வங்கதேசம்.. எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங் சேவை தொடக்கம்..!

துணை முதல்வர் பதவி, ஆட்சியில் அதிகாரம் கேட்பதில் தவறில்லை: கார்த்தி சிதம்பரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments