Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மீண்டும் மீண்டும் அராஜகம்.. ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது..!

மீண்டும் மீண்டும் அராஜகம்.. ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது..!

Siva

, செவ்வாய், 23 ஜனவரி 2024 (10:04 IST)
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து வருவது தொடர்கதையாகி வரும் நிலையில் இதற்கு முடிவு காட்ட மத்திய மாநில அரசுகளுக்கு மீனவர் சங்கங்கள் மற்றும் மீனவர்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை எடுத்து வருகின்றனர் 
 
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் பலமுறை மத்திய அரசுக்கு இதுகுறித்து  கடிதம் எழுதியுள்ளார் என்பதும் மத்திய அரசும் இலங்கை அரசிடம் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த பேச்சு வார்த்தைகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டாலும் தொடர்ச்சியாக மீனவர்கள் மீண்டும் மீண்டும் கைது செய்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
இலங்கை கடற்படையின் தொடர் அராஜகத்திற்கு முடிவு கட்ட மீனவர்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் இன்று மீண்டும் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 9 மீனவர்கள் கைது செய்யப்பட்டு இருப்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
கச்சத்தீவு, நெடுந்தீவு இடையே  மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 6 மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்ததாகவும், அவர்களிடம் இருந்த 2 படகுகளும் சிறைபிடிக்கப்பட்டு உள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மத அரசியலா?. மனித அரசியலா?. ஒரு கை பார்ப்போம்?. உதயநிதி ஸ்டாலின்.!