Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒரே தெருவில் 70 பேருக்கு கொரோனா: ஐஸ் ஹவுஸ் பகுதியில் பீதி!

Advertiesment
அம்மா உணவகம்
, செவ்வாய், 5 மே 2020 (14:33 IST)
சென்னை ஐஸ் ஹவுஸ் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 70 ஆக அதிகரிப்பு. 
 
கொரோனாவினால் ஏற்படும் பாதிப்பு தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. குறிப்பாக சென்னையில் எதிர்பார்த்ததை விட பலமடங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1724. 
 
இந்நிலையில் சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் இயங்கி வரும் அம்மா உணவக ஊழியருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது நேற்று தெரிய வந்துள்ளது. இதனைத்தொடர்ந்து நேற்று இந்த பகுதியில் ஒரே நாளில் 20 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. 
 
இந்த 20 பேருக்கு அம்மா உணவக ஊழியரால் கொரோனா பரவியதா என உறுதிப்படுத்தபடவில்லை என்றாலும் அப்பகுதி மக்களுக்கு இது பீதியை கிளப்பியுள்ளது. இந்த பீதியை மேலும் அதிகரிக்கும் வகையில் அந்த பகுதியில் 70 பேருக்கு கொடோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொரோனா வைரஸால் 5 விதமான தோல் பாதிப்புகள் - குழப்பத்தில் மருத்துவர்கள்