Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அடங்காத பொதுஜனம்: அதிகரிக்கும் வழக்கு, கைது, அபராத தொகை!!

Advertiesment
அடங்காத பொதுஜனம்: அதிகரிக்கும் வழக்கு, கைது, அபராத தொகை!!
, செவ்வாய், 5 மே 2020 (10:35 IST)
ஊரடங்கு மீறலால் தமிழகத்தில் 3,93,463 வழக்குகள் பதிவாகியுள்ளன என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகத்திலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மாவட்ட எல்லைகள் பிரிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. மக்கள் அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து எதற்காகவும் வெளியே வர வேண்டாம் என கூறப்பட்டுள்ளது.  
 
மக்கள் தேவையில்லாமல் கூடுவதை தவிர்க்க காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதுதவிர ஊரடங்கு விதிகளை மீறி ஊர் சுற்றுவோர் மீது வழக்கு பதிவு செய்தல், கைது செய்தல், வாகனங்களை பறிமுதல் செய்தல் ஆகிய நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 
 
தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 4,16,344 பேர் கைதாகி ஜாமீனில் விடுவிப்பு, 3,93,463 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது, மேலும் 3,48,231 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.4.15 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மனசு வந்து டாஸ்மாக்கை திறக்கல! – அமைச்சர் செல்லூர் ராஜூ விளக்கம்!