Publish Date: Wed, 09 Jun 2021 (18:33 IST)
Updated Date: Wed, 09 Jun 2021 (18:35 IST)
சமீபத்தில் முக ஸ்டாலின் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றதில் இருந்து பல ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டு வருகின்றனர் என்பதும் தலைமைச் செயலாளர், டிஜிபி உள்பட கிட்டத்தட்ட நூற்றுக்கணக்கான முக்கிய அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த வகையில் தற்போது மேலும் 25 ஐஏஎஸ் அதிகாரிகள் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதில் ஐந்து மாநகராட்சி ஆணையர்கள் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது. மதுரை, கோவை, சேலம்,திருப்பூர், நெல்லை மாநகராட்சிகளுக்கு நியமனம் செய்யப்பட்ட புதிய ஆணையர்கள் விவரம் இதோ:
மதுரை மாநகராட்சி ஆணையர் கேபி கார்த்திகேயன்
சேலம் மாநகராட்சி ஆணையர் கிறிஸ்து ராஜா
திருப்பூர் மாநகராட்சி ஆணையர் கிராந்திகுமார்
நெல்லை மாநகராட்சி ஆணையர் விஷ்ணு சந்திரன்
கோவை மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சங்கரா