Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சென்னையில் நாளை முதல் அனைத்து போக்குவரத்து சிக்னல்களும் இயங்கும்: காவல் ஆணையர் பேட்டி!

சென்னையில் நாளை முதல் அனைத்து போக்குவரத்து சிக்னல்களும் இயங்கும்: காவல் ஆணையர் பேட்டி!
, திங்கள், 7 ஜூன் 2021 (19:02 IST)
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு வாரங்களாக தளர்வுகள் இல்லாத ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை அடுத்து எந்த ஒரு வாகன போக்குவரத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை இதனால் சென்னையில் உள்ள அனைத்து சிக்னல்களும் செயல்படாமல் இருந்தது. 
 
இந்த நிலையில் இன்று முதல் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து வாகனங்கள் சர்வ சாதாரணமாக சென்று வருகின்றன. குறிப்பாக சென்னையில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படும் அளவுக்கு வாகனங்கள் சென்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது 
 
இதனை அடுத்து சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அவர்கள் அளித்த பேட்டியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த சென்னையில் நாளை முதல் அனைத்து சிக்னல்களும் இயங்கத் தொடங்கும் என்று அறிவித்துள்ளார். மேலும் போலீசாருக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். நாளை முதல் சென்னையில் அனைத்து சிக்னல்களும் இயங்கும் என்று கூறியிருப்பது வாகன ஓட்டிகளுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பெண் எஸ்.ஐ.க்கு கொலை மிரட்டல் விடுத்த சென்னை ஆட்டோ ஓட்டுநர் கைது!