Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திருப்பூரில் சுற்றித்திரிந்த 5 வங்கதேச இளைஞர்கள்: ஆதார் அட்டை வைத்துள்ளதாக தகவல்

arrested
, வெள்ளி, 14 அக்டோபர் 2022 (20:32 IST)
திருப்பூரில் சுற்றித்திரிந்த 5 இளைஞர்களை போலீசார் பிடித்து விசாரணை செய்ததில் அவர்கள் வங்க தேசத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
வங்கதேசத்தில் இருந்து ஏராளமானோர் இந்தியாவில் ஊடுருவி இந்தியாவில் ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உள்பட பல்வேறு ஆவணங்களை போலியாக வாங்கி வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது
 
இந்த நிலையில் திருப்பூரில் சந்தேகத்திற்கு இடமாக 5 இளைஞர்கள் சுற்றி திரிந்த நிலையில் அவர்களை போலீசார் பிடித்து விசாரணை செய்தனர். அப்போது அவர்கள் அனைவருமே வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்தது
 
அதுமட்டுமின்றி திருப்பூரில் கடந்த சில ஆண்டுகளாக அவர்கள் முறைகேடாக தங்கியிருந்ததாகவும் ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை பெற்று உள்ளதாகவும் தெரிய வந்தது. இதனை அடுத்து ஐந்து இளைஞர்களையும் போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பழங்குடியினர் சான்றிதழ் வழங்குவதை இலகுவாக்கிட வேண்டும்- திருமாவளவன்