Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

திருநங்கைகள் மீது கொடூர தாக்குதல் நடத்திய இளைஞர்கள் கைது !காவல்துறை தகவல்

tuticorn
, வியாழன், 13 அக்டோபர் 2022 (14:01 IST)
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே திருநங்கைகளை தாக்கிய இளைஞர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, கழுகுமடை அருகேயுள்ள பகுதியில், சில இளைஞர்கள், திரு நங்கைகளைக் கொடூரமாகத் தாக்கி, அவர்களுக்கு ரத்தம் வரும்வரை அடித்துச் சித்ரவதை செய்து கூந்தலை வெட்டும்  வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது.

இதைப்பார்த்த  நெட்ட்சன்கள் திரு நங்கைகளை தாக்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து, தமிழக காவல்துறை, குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் விரைவில் அவர் கைது செய்யப்படுவார்கள் என அறிவித்திருந்தனர்.

இந்த இலையில், திருநங்கைகளை தாக்கிய 2 இளைஞர்கள் மீது வழக்குப் பதிவு செய்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக, ஆஸ்ரா கர்க் தென்மண்டல காவல்துறை தலைவர் தெரிவித்துள்ளார்.

Edited by Sinoj


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரூ.100 கட்டணத்தில் சென்னை மெட்ரோ ரயிலில் விருப்பம் போல் பயணம்