Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சிக்கன் பிரியாணி சாப்பிட்ட 40 பேருக்கு வாந்தி மயக்கம்: விருந்தில் ஏற்பட்ட பரிதாபம்

biriyani
, செவ்வாய், 31 மே 2022 (07:30 IST)
சிக்கன் பிரியாணி சாப்பிட்ட 40 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் 
 
திருக்கோவிலூர் அருகே கரும்பு வெட்டும் பணி முடிவடைந்ததை அடுத்து ஊழியர்களுக்கு விருந்து வைக்கப்பட்டுள்ளது
 
இந்த விருந்தில் சிக்கன் பிரியாணி பரிமாறப்பட்டthai அடுத்து ஊழியர்கள் மிகவும் ஆசையுடன் சிக்கன் பிரியாணியை சாப்பிட்டனர் 
 
இந்த நிலையில் சிக்கன் பிரியாணி சாப்பிட்ட சில நிமிடங்களில் 40 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது 
 
இதனையடுத்து உடனடியாக அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் 
 
இந்த நிலையில் இது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து சிக்கன் பிரியாணி வாங்கிய கடையில் ஆய்வு செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

53.18 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு!